சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை! சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்திய மக்கள்தொகையில்100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்கு செலவிட இயலாத சூழலில் இருப்பதாக ஆய்வில் தகவல்

News image
Updated On :27 பிப்ரவரி 2025, 5:56 pm IST

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு 50 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் சுமார் 100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்கு செலவிட இயலாத சூழலில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும், மொத்த மக்கள்தொகையில் 30 கோடி பேர் மட்டுமே அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்கு தயக்கத்துடன் செலவிடுகின்றனர்.

140 கோடி மக்கள்தொகையில் 10 சதவிகிதமான வெறும் 14 கோடி பேர் மட்டுமே சந்தையில் தொடர்ந்து பங்களிக்கின்றனர். இந்த 10 சதவிகித இந்தியர்கள்தான், தற்போதைய தேசிய வருமானத்தில் 57.7 சதவிகிதத்தைக் கொண்டிருக்கின்றனர். இது 1990-ல் 34 சதவிகிதமாக இருந்தது.

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதனிலிருந்து, ஏழைகள் வாங்கும் திறன் (சந்தையில் பங்களிப்பு) குறைந்து வரும்வேளையில், பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருவது தெளிவாகிறது. இருப்பினும், புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.