நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

மணிப்பூர்: சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைத்த 4 மாவட்ட மக்கள்..

News image
Updated On :28 பிப்ரவரி 2025, 9:23 am IST

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த 20-ஆம் தேதி, மக்கள் தங்களிடம் சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை 7 நாள்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில், கைத்துப்பாக்கி, அதிநவீன துப்பாக்கி, கையெறி குண்டு, அதன் தோட்டாக்கள் மற்றும் இரண்டு வயர்லெஸ் ஃபோன்கள் மற்றும் பிற பொருள்களை போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.

மேலும், பிஷ்ணுப்பூர் மாவட்டத்துக்குள்பட்ட பௌகாச்சோ இகாய் காவல் நிலையத்திலும் எஸ்பிபிஎல் துப்பாக்கி உள்பட சட்டவிரோத ஆயுதங்களைப் போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர்.

இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போராட்டக்காரர்கள் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தமாக இதுவரை 109 ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு பிப்.13 முதல் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. 2027 வரை பதவிக்காலம் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவை இடை நிறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.