திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நள்ளிரவு 0.00! மும்பை ரயில்கள் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டம்!

மும்பை ரயில் நிலையத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

News image

புத்தாண்டு

Updated On :1 ஜனவரி 2025, 1:12 pm IST

மும்பையில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரயில்களில் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தை களைகட்டியது.

பல ஆண்டுகாலமாக, இந்த வழக்கம் நடைமுறையில் இருப்பதாகவும், கடலில் கப்பல்களும் நள்ளிரவு 12 மணிக்கு இதுபோன்ற ஒலிகளை எழுப்பும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணி மற்றும் படிப்பு என பல்வேறு காரணங்களால் வெளியில் தங்கியிருப்பவர்கள், புத்தாண்டை வீட்டில் கொண்டாடவும், வேலை முடிந்து வீடு திரும்புவோரும் நேற்று நள்ளிரவு மும்பை ரயில் நிலையத்தில் காத்திருந்தால், அவர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவம் கிடைத்திருக்கும்.

சரியாக மும்பை ரயில் நிலையத்தில் இருந்த கடிகாரங்கள் 0.00 என்று ஆகும்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில்களின் ஹாரன்கள் இசை போல ஒலி எழுப்பி, புத்தாண்டு வாழ்த்து சொன்னது போல இசைக்கப்பட்டது.

அப்போது அங்கு நின்றிருந்தவர்கள் பலரும் உற்சாகமடைந்தனர். சிலருக்கு இது காலம் காலமாக நடப்பது தெரிந்திருக்கலாம். புதியவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.