கட்சியின் எதிர்காலம் கருதி சரத் பவாரும் அஜீத் பவாரும் இணைய வேண்டு என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் புரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புரஃபுல் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் மீது எங்களுக்கு (அஜீத் பவார் அணி) மிகுந்த மரியாதை உள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும். கொள்கையால் வெவ்வேறு அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளோம். ஆனால், மூத்த பவார் (சரத் பவார்) மீதான மரியாதை குறைந்துவிடவில்லை.
எதிர்காலத்தில் இரு பவார்களும் இணைந்தால், அதில் எந்தத் தவறும் இல்லை. பவார் குடும்பத்தில் ஒருவனாக நானும் இதனை பரிந்துரைக்கிறேன். பவார் குடும்பம் மீண்டும் இணைய வேண்டும் என்பதே தனிப்பட்ட முறையில் என்னுடைய விருப்பமாகவும் உள்ளது. தில்லியில் மூத்த பவாரை அவரின் பிறந்தநாளின்போது சந்தித்தேன். அது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. இருதரப்பிலும் சுமூகமான உறவு தொடர வேண்டும். இது அவர்கள் இருவருக்கு மட்டுமல்லாது கட்சிக்கும் நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பவார் மற்றும் அஜீத் பவார் ஆகிய இருவருக்கும் நெருக்கமான சிலர் இருவரையும் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸுடன் இணையும் சரத் பவார் கட்சி! இறுதிக்கட்ட பேச்சு தீவிரம்!
திரிணமூல், சிவசேனைக்கு அடுத்து பிளவுபடப்போவது தேசியவாத காங்கிரஸா?

திரிணமூல் காங்கிரஸ் பிளவு: ‘அதிருப்தி எம்.பி.க்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் தொடா்பில்லை’- காகோலி கோஷ்






