ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் 2024-ல் மொத்தம் 94.83 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் மிகவும் புனிதமான இந்து சமயக் கோயில்களில் வைஷ்ணவி தேவி கோயிலும் ஒன்றாகும். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற புனிதத் தலமானது ஐம்மு பகுதியில் கத்ரா என்ற ஊருக்கு அருகில் 5,200 அடி உயரத்தில் இமயமலையின் ஒரு பகுதியான திரிகூடமலையின் உச்சியில் வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது. 30 மீ.நீளமும், 1.5 உயரமும் கொண்ட குகையில் முப்பெரும் தேவியரும் அருவ வடிவில் அமைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (தனுசு)
இதுதொடர்பாக தலைமைச் செயல் அதிகாரி கூறுகையில்,
2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 94.93 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த பத்து வருடத்தில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும். முன்னதாக டிசம்பர் 12 வரை 90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்ததாகக் கோயில் நிர்வாக தெரிவித்தது.
பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம், அதனால் அவர்களுக்கு இன்னும் சிறந்த அனுபவம் கிடைக்கும். எனவே, நாங்கள் தொடர்ந்து பல திட்டங்களில் பணியாற்றி வருகிறோம். கத்ராவுக்கான இணைப்பு அதிகரித்து வருகின்றது. வந்தே பாரத் ரயில் அல்லது தில்லி-கத்ரா எக்ஸ்பிரஸ் விரைவில் முடிவடையும், கத்ராவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், எனவே, உள்கட்டமைப்பு முயற்சிகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது.
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட மதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

வாரணாசியில் பிரதமர் மோடி!

ஆண்டாள் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வழிபாடு

திருச்செந்தூரில் சித்திரை விசு கனி! ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்!!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


