/

வைஷ்ணவி தேவி கோயிலில் 94.8 லட்சம் பேர் தரிசனம்!

சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற புனிதத் தலம் பற்றி..

News image

வைஷ்ணவி தேவி கோயிலில் வழிபடும் பக்தர்கள்

Updated On :1 ஜனவரி 2025, 3:06 pm IST

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் 2024-ல் மொத்தம் 94.83 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் மிகவும் புனிதமான இந்து சமயக் கோயில்களில் வைஷ்ணவி தேவி கோயிலும் ஒன்றாகும். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற புனிதத் தலமானது ஐம்மு பகுதியில் கத்ரா என்ற ஊருக்கு அருகில் 5,200 அடி உயரத்தில் இமயமலையின் ஒரு பகுதியான திரிகூடமலையின் உச்சியில் வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது. 30 மீ.நீளமும், 1.5 உயரமும் கொண்ட குகையில் முப்பெரும் தேவியரும் அருவ வடிவில் அமைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயல் அதிகாரி கூறுகையில்,

2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 94.93 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த பத்து வருடத்தில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும். முன்னதாக டிசம்பர் 12 வரை 90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்ததாகக் கோயில் நிர்வாக தெரிவித்தது.

பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம், அதனால் அவர்களுக்கு இன்னும் சிறந்த அனுபவம் கிடைக்கும். எனவே, நாங்கள் தொடர்ந்து பல திட்டங்களில் பணியாற்றி வருகிறோம். கத்ராவுக்கான இணைப்பு அதிகரித்து வருகின்றது. வந்தே பாரத் ரயில் அல்லது தில்லி-கத்ரா எக்ஸ்பிரஸ் விரைவில் முடிவடையும், கத்ராவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், எனவே, உள்கட்டமைப்பு முயற்சிகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது.

ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட மதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.