யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

2026-க்கு பிறகு மோடி அரசு நீடிக்காது: சஞ்சய் ரெளத்

மத்தியில் மோடி தலைமையிலான அரசு நீடிக்காது என்று சிவசேனை எம்பி பேட்டி..

News image
சஞ்சய் ரெளத் - ANI
Updated On :2 ஜனவரி 2025, 6:07 am

DIN

2026-க்கு பிறகு மோடி தலைமையிலான மத்திய அரசு நீடிக்காது என்று சிவசேனை (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ரெளத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய சஞ்சய் ரெளத் தெரிவித்ததாவது:

“தற்போதைய மத்திய அரசு 2026-க்கு பிறகு நீடிக்குமா என்ற சந்தேகம் எனக்குள் உள்ளது. தனது ஆட்சி காலத்தை மோடி நிறைவு செய்யமாட்டார் என்று நினைக்கிறேன். மத்தியில் ஆட்சி கலைந்தால், அது மகாராஷ்டிர அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பீட் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் மாநில அமைச்சருக்கு தொடர்புண்டு. சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு குழு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் இயங்கி வரும் காற்றாலை நிறுவனத்திடம் சமீபத்தில் பணம் கேட்டு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காற்றாலை நிறுவனத்துக்கு ஆதரவாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு பேசிய சந்தோஷ் தேஷ்முகி என்பவர் டிசம்பர் 9 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.