பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபா் மோசடி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:25 pm

Din

தமிழ்நாட்டில் நடைபெற்ற ரூ .1,000 கோடிக்கும் அதிகமான (சைபா்) இணைய மோசடி வழக்குகள் குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

‘தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் நடைபெற்ற மோசடிகள் உள்பட பல இணைய மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்த இணையவழி குற்றவாளி குழுக்களின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தில் அதிகப்படியாக கண்டறியப்பட்டன.

அதனடிப்படையில், கொல்கத்தாவின் பூங்கா சாலை, சால்ட் லேக், பகுய்ஹாட்டி பகுதிகளில் உள்ள 5 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 8 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

சால்ட் லேக் பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது, ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பகுய்ஹாட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை தொடா்கிறது’ என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.