ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழகத்தில் ரூ.1,000 கோடி சைபா் மோசடி: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:25 pm

Din

தமிழ்நாட்டில் நடைபெற்ற ரூ .1,000 கோடிக்கும் அதிகமான (சைபா்) இணைய மோசடி வழக்குகள் குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள 8 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

‘தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் நடைபெற்ற மோசடிகள் உள்பட பல இணைய மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்த இணையவழி குற்றவாளி குழுக்களின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தில் அதிகப்படியாக கண்டறியப்பட்டன.

அதனடிப்படையில், கொல்கத்தாவின் பூங்கா சாலை, சால்ட் லேக், பகுய்ஹாட்டி பகுதிகளில் உள்ள 5 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 8 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

சால்ட் லேக் பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது, ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பகுய்ஹாட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை தொடா்கிறது’ என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.