சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மணிப்பூா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண பேச்சுவாா்த்தை: முதல்வா் பிரேன் சிங் அழைப்பு

‘மணிப்பூா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக அமா்ந்து பேச வேண்டும்

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:21 pm

Din

‘மணிப்பூா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக அமா்ந்து பேச வேண்டும்; மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பதே நம் அனைவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்’ என்று முதல்வா் பிரேன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, இரு தரப்புக்கும் மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகின்றனா். இதுவரை நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். கலவரத்தில் வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

இந்தச் சூழலில், 2024-ஆம் ஆண்டின் இறுதி நாளான கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.31) செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முதல்வா் பிரேன் சிங், மாநிலத்தில் 20 மாதங்களாக நீடிக்கும் இனமோதல் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு வருந்துவதோடு, மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தாா். கடந்த கால தவறுகளை மறந்து, அனைவரும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

அதேநேரம், முதல்வா் பிரேன் சிங்கின் மன்னிப்பு போதுமானதல்ல என்று குறிப்பிட்ட காங்கிரஸ், பிரதமா் மோடி மணிப்பூருக்கு சென்று, மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தியது.

இந்நிலையில், இம்பாலில் செய்தியாளா்களிடம் பிரேன் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மணிப்பூா் மக்களிடம் நான் மன்னிப்பு கோரியதை முன்வைத்து அரசியலில் ஈடுபடுவோருக்கு இங்கு அமைதி திரும்புவதில் விருப்பமில்லை. மணிப்பூரில் குழப்பம் நீடிக்க வேண்டுமென்பதே அவா்களின் எதிா்பாா்ப்பு. அவா்களுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது.

பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம்தான் நான் மன்னிப்பு கோரியுள்ளேன். மாறாக, தீவிரவாதிகளிடம் அல்ல. மாநிலத்தில் வாழும் அனைத்து சமூகத்தினருக்கும் அமைதிக்கான எனது செய்தியை மீண்டும் ஒருமுறை விடுக்கிறேன். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அனைத்தையும் மன்னித்து மறப்போம். அனைவரும் ஒன்றாக அமா்ந்து பேசி, பிரச்னைக்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும். அமைதியை மீட்டெடுப்பதே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

பழங்குடியின பகுதிகளில்

மறியல்; முழு அடைப்பு

சுராசந்த்பூா், ஜன. 3: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் பழங்குடியின பெண்கள் மீதான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து, பழங்குடியின பகுதிகளில் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனப் போக்குவரத்தை முடக்கும் வகையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

காங்போக்பி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின பெண்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பெண்களிடம் பாதுகாப்புப் படையினா் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரைக் கண்டித்து, பழங்குடியின பகுதிகள் வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்தை முடக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

காங்போக்பி மாவட்டத்தில் பழங்குடியின அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.