மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பனிமூட்டம்: ஸ்ரீநகரில் 10 விமானங்கள் ரத்து

பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

விமனாம்(கோப்புப்படம்)

Updated On :5 ஜனவரி 2025, 6:42 am

பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 50 மீட்டர் மீட்டா் தொலைவு வரை மட்டுமே தெளிவான காண்புநிலை இருந்தது.

விமானங்களை இயக்குவதற்கு 1000 முதல் 2,000 மீட்டா் தொலைவுக்கு தெளிவான காண்புநிலை இருக்க வேண்டும்.

இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் காலை 10 மணிக்குப் பிறகே புறப்பட்டன என்று விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் காண்புநிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் இதுவரை 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

சனிக்கிழமையும் விமான நிலையத்தில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் ஒருசில விமானங்கள் தாமதமாக புறப்பட்டதோடு மாற்று விமான நிலையங்களுக்கும் திருப்பி விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.