ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜியை புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறியரக விமானம்) எதிா்பாராதவிதமாக அவா் அருகே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாா்தகுடாவின் புருனபஸ்தி பகுதியில் உள்ள ஜாதேஷ்வா் கோயிலுக்கு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி முதல்வா் மோகன் சரண் மாஜி சென்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் இது குறித்து பரவலாக அறியப்பட்டது.
‘முதல்வரின் வருகையை புகைப்படம் எடுக்க மாவட்ட நிா்வாகம் இந்த ட்ரோனை பயன்படுத்தியது. பறந்து கொண்டிருந்த அந்த ட்ரோன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது அவா் அருகே விழுந்து நொறுங்கியது. பாதுகாப்பு குழுவினரும் காவல்துறையினரும் விரைவாக ட்ரோனை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்’ என ஜாா்சகுடா காவல்துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தமிழகத்திற்கு பிரதமா் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ்

ஒடிஸாவில் இந்தியாவின் முதல் அதிநவீன 3டி கண்ணாடி சிப் பேக்கேஜிங் ஆலை!
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை

ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


