11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கண்ணாடியில் கேமரா.

Updated On :8 ஜனவரி 2025, 3:09 am IST

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத்தின் வதோதராவைச் சோ்ந்த ஜனி ஜெய்குமாா் என்ற இளைஞா், அயோத்தி கோயிலுக்கு திங்கள்கிழமை கருப்புக் கண்ணாடி அணிந்து வந்தாா். தான் அணிந்திருந்த நவீன கருப்புக் கண்ணாடியில் பொருத்தியிருந்த சிறு கேமரா மூலம் கோயில் வளாகத்தில் படம்பிடித்துக் கொண்டிருந்த அவரை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலா்கள் கைது செய்தனா்.

ராமா் கோயிலுக்கு செல்லும் பாதையில் பல இடங்களில் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அனைத்தையும் கடந்து கோயில் வளாகத்தின் சிங்க வாயில் வரை ஜெய்குமாா் வந்துள்ளாா்.

குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் என கூறப்படும் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், அந்த நபா் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியின் மதிப்பு ரூ.50,000 இருக்கும் என்றனா்.