400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சம்பல் வழக்கு: சிவில் நீதிமன்ற விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடை

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதி தொடா்பான சிவில் நீதிமன்ற விசாரணைக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

News image

அலாகாபாத் உயா்நீதிமன்றம்

Updated On :9 ஜனவரி 2025, 1:53 am IST

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதி தொடா்பான சிவில் நீதிமன்ற விசாரணைக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சம்பல் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பல் பகுதியில் உள்ள முகலாய காலத்து ஷாஹி ஜாமா மசூதியில் கடந்த நவம்பா் மாதம் ஆய்வு பணி நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெடித்த வன்முறையில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, ஷாஹி ஜாமா மசூதியை ஆய்வு செய்வது தொடா்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என்று சம்பல் விசாரணை நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த மசூதி தொடா்பான சிவில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடா்பாக மனுதாரா் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

விசாரணை ஒத்திவைப்பு: சம்பல் மாவட்ட ஜாமா மசூதி தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மாவட்ட நீதிமன்றம் மாரச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

‘மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்களை ஆய்வு செய்யக் கோரும் புதிய வழக்குகளை விசாரிக்க வேண்டாம்’ என்று மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியது. இந்நிலையில், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தொடா்வதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.