வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: ஆம் ஆத்மி எம்எல்ஏ பலி! விபத்தா? கொலையா?

பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தலையில் குண்டு பாய்ந்து பலியானார்.

News image

ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி

Updated On :11 ஜனவரி 2025, 1:39 pm IST

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தலையில் குண்டு துளைத்து தனது அறையில் பலியாகி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு லூதியானா தொகுதி எம்எல்ஏவான குர்பிரீத் கோகி (57) நேற்று (ஜன. 10) இரவு தனது அறையில் தனியாக இருந்தார். அப்போது தனது கைத் துப்பாக்கியை அவர் துடைத்துக் கொண்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து அவரது தலையில் குண்டு துளைத்ததாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு உடனடியாக குடும்பத்தினர் அவரது அறைக்குச் சென்று அவரை தயானந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக குர்பிரீத் கோகு குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பஞ்சாப் முதல்வர் இரங்கல்

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் வருத்தத்துடன் குறிப்பிட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், ”மரியாதைக்குரிய எம்எல்ஏ குர்பிரீத் கோகி ஜி காலமானார் என்ற இதயத்தை உடைக்கும் செய்தியை அறிந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டு மிக வருத்தமாக இருக்கிறது. கோகி ஜி மிகவும் அன்பானவர். இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன். கடவுள் அவரது ஆன்மாவை ஆசீர்வதித்து, இந்த இழப்பைத் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மியில் இணைந்த கோகி, லூதியான மேற்கு தொகுதியில் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-யுமான பாரத் பூஷன் அஷுவைத் தோற்கடித்தார்.

நேற்று (ஜன. 11) இறப்பதற்கு முன்னர் லூதியானா பார் அசோசொயேஷன் நடத்திய ஒரு நிகழ்வில் பஞ்சாப் பேரவைத் தலைவர் குல்தர் சந்த்வனுடன் கோகி கலந்துகொண்டார்.

இரவில் திடீரென அவர் தன்னைத் தானே சுட்டுக் கொன்று பலியான சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.