சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தில்லியில் சூடுபிடிக்கும் தேர்தல்: பாஜக - ஆம் ஆத்மி இடையே போஸ்டர் போர்!

புது தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக - ஆம் ஆத்மி இடையே போஸ்டர் போர்!

News image
Updated On :11 ஜனவரி 2025, 2:47 pm IST

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி - பாஜக இடையே போஸ்டர் போர் வலுத்துள்ளது.

பாஜகவின் கல்காஜி தொகுதி வேட்பாளர் ரமேஷ் பிதுரி பற்றி ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தில் வரும் அரக்க ராஜாவின் படத்துடன், முகத்தை மட்டும் ரமேஷ் பிதுரியுடையதை இணைத்து, பாஜகவின் அட்டூழியக்காரர், முதல்வர் முகம் என்று பதிவிட்டுள்ளது.

சும்மா இருக்குமா என்ன பாஜக. சொந்தமாக போஸ்டர் அடித்து ஆம் ஆத்மியை காலி செய்திருக்கிறது. ஷீஷ்மஹாலில் வசிக்கும் ஆம் ஆத்மி ராஜா, துரத்தப்பட வேண்டியவர் என்பதை தில்லி மக்கள் முடிவு செய்வார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட போஸ்டரில், மிக மோசமான கட்சியின் மோசமான வேட்பாளர் என்று வர்ணித்து போஸ்டர் வெளியிட்டிருந்தது.

அதில், பாஜகவின் மூத்த தலைவர்களான அமித் ஷா, நட்டா, ரமேஷ் பிதுரி உள்ளிட்டவர்களின் புகைப்படங்களையும், அவர்கள் சொன்ன மோசமான கருத்துகளையும் வெளியிட்டு போஸ்டர் அடித்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் ஒரு போஸ்டர் வெளியிட்டிருந்தது. இப்படி, தில்லியில் பிரசாரம் சூடுபிடித்ததோ இல்லையோ, போஸ்டர் போர் தீவிரமடைந்துள்ளது. தில்லி மக்களுக்கும், போஸ்டர் கிரியேட்டர்களின் உருவாக்கத் திறன் பிடித்திருக்கும் என்றே கூறப்படுகிறது.

Story image

தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ஆம் தேதி தேர்தலும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.