விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர் மோடி
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இளைஞர்களுக்கு எல்லா காலங்களிலும் அவர் உத்வேகம் அளிக்கிறார்.
அவர் இளம் மனங்களில் ஆர்வத்தையும் நோக்கத்தையும் தொடர்ந்து தூண்டுகிறார்.
விவேகானந்தர் புகழைப் போற்றி வணங்குவோம்: அண்ணாமலை
வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அவரது கனவை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் நாளாக இன்று கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.