புது தில்லி : தில்லி யூனியன் பிரதேச தேர்தலில் ஒரேகட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடம் தேர்தல் நன்கொடை அளித்து உதவுமாறு சமூக வலைதளம் மூலம் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) கோரிக்கை விடுத்துள்ளார் தில்லி முதல்வர் அதிஷி. தில்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் உள்பட செலவுக்காக ரூ. 40 லட்சம் வரை தனக்கு தேவைப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான அதிஷி பேசியுள்ளார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சிகு மக்களிடமிருந்து தேர்தல் நன்கொடையாக இணைய வழி பரிவர்த்தனை மூலம் 24 மணி நேரத்தில் ரூ. 19 லட்சம் தொகை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, திங்கள்கிழமை(ஜன. 13) பகல் வரையிலான நிலவரப்படி, 455 பேரிடமிருந்து ரூ. 19,32,728 பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் தோல்வி: அறிவாலயம் வந்தார் ஸ்டாலின்!
மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிா்க்கட்சிகளுக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் கண்டனத் தீா்மானம்

பிரதமர் மோடி, அமித் ஷாவால் ஈர்க்கப்பட்டேன்: சுவாதி மாலிவால்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

