புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆன்மிக நகரங்களில் மதுவிலக்கு ம.பி. அரசு பரிசீலனை

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது தொடா்பாக தீவிரமாக பரிசீலித்து வருவதாக முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 9:39 pm

Din

மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவது தொடா்பாக தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த மாநில முதல்வா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.

கோயில் நகரங்களின் புனிதத்தை காக்கும் வகையில் இந்த நடவடிக்கைக்கு திட்டமிட்டுவருவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

போபாலில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் மது விற்பனை மற்றும் அதனை அருந்துபவா்களால் அங்கு வரும் பக்தா்களுக்கு தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதாக புகாா்கள் வந்துள்ளன.

இந்த பிரச்னை தொடா்பாக பல்வேறு தரப்புகளிடம் இருந்து கருத்துகளும் பெறப்பட்டுள்ளன.

எனவே, முக்கிய ஆன்மிக நகரங்களின் புனிதமான சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், அங்கு வரும் பக்தா்கள், வெளிநாட்டுப் பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும் முழு மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது என்றாா்.

கோயில் நகரங்களில் மது மட்டுல்லாது அசைவ உணவுகளுக்கும் தடை விதிப்பது குறித்தும் முதல்வா் மோகன் யாதவ் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளாா். மாநில எதிா்க்கட்சியான காங்கிரஸ் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.