இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றார்.
இஸ்ரோவின் 10-ஆவது தலைவராக இருந்து வந்த சோம்நாத்தின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததால், புதிய தலைவராக வி. நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்வழியில் படித்து, 1984-ல் இஸ்ரோவில் பணியைத் தொடங்கிய இவர், இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (LPSC) இயக்குநராகவும், இந்தியாவின் லட்சிய மனித விண்வெளிப் பயணப் பயணமான ககன்யான் திட்டத்திற்கான தேசிய அளவிலான சான்றிதழ் வாரியத்தின் (HRCB) தலைவராகவும் முக்கியப் பங்கு வகித்தார்.
இதையும் படிக்க: மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, ஆதித்யா எல்1 உள்ளிட்ட திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர், இஸ்ரோ தலைவர் பதவியுடன், மத்திய அரசின் விண்வெளித்துறை செயலாளராகவும் பதவி வகிப்பார். நாராயணன் 2 ஆண்டுகளில் இந்தப் பதவிகளில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இஸ்ரோ பலவீனப்படக் கூடாது!

‘ககன்யான்’ திட்டத்துக்காக உயிரி விண்வெளி அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும் இஸ்ரோ!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1!

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



