கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி இதுவா? ராகுல் விமர்சனம்

தில்லியை பாரீஸ், லண்டனைப் போன்று மாற்றுவேன் என்ற அரவிந்த் கேஜரிவாலின் வாக்குறுதிகளை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பராமரிப்பின்றி கிடக்கும் கால்வாய் - படம் | எக்ஸ் - ராகுல் காந்தி

Published On :

தில்லியை பாரீஸ், லண்டனைப் போன்று மாற்றுவேன் என்ற அரவிந்த் கேஜரிவாலின் வாக்குறுதிகளை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தில்லியில் பராமரிப்பின்றி கிடக்கும் சாக்கடை கால்வாய்களையும், சாலைகளையும் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தலைநகரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (ஜன. 13) சீலம்பூர் பகுதியில் பேசிய ராகுல் காந்தி,

’’ஊழலை முற்றிலுமாக ஒழிப்பேன் என அரவிந்த் கேஜரிவால் கூறினார். அவர் ஊழலை ஒழித்தாரா? பிரதமர் நரேந்திர மோடியின் பாணியில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார் கேஜரிவால். மோடியின் யுக்தியையே அரவிந்த் கேஜரிவாலும் கையாள்கிறார். காற்று மாசு, ஊழல், பணவீக்கம் இது எல்லாமே ஆம் ஆத்மி ஆட்சியில் அதிகரித்துள்ளது’’ என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தில்லியில் பராமரிப்பின்றி காணப்படும் கால்வாய் அருகேவுள்ள குடியிருப்புப் பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அப்போது முறையான சாலை வசதியின்றி, பராமரிப்பின்றி கிடக்கும் கால்வாய்கள் அருகே வசித்துவரும் மக்களைச் சந்தித்து உரையாடினார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தில்லியை பாரீஸாக மாற்றுவேன், லண்டனாக மாற்றுவேன் எனக் கூறியவரின் தில்லி இதுதான் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.