நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரத்தில், அவரி குற்றவாளி ரூ.1 கோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாந்த்ராவில் உள்ள நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில், மர்மநபர் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைத்துள்ளது.
சத்குரு ஷரணில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை முயற்சியின் போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதல் நடத்திய நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
VIDEO | Attack on Saif Ali Khan: CCTV footage shows the alleged attacker fleeing the building through staircase.
— Press Trust of India (@PTI_News) January 16, 2025
(Source: Third Party)#SaifAliKhanInjured pic.twitter.com/VHpAenxFdu
சைஃப் அலிகானுக்கு கழுத்து உள்பட 6 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு லீலாவதி மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி காவல்துறை தரப்பில் இருந்து கூறுகையில், “கொள்ளையடிக்க வந்தவர், அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவரது உடைகளை மாற்றியிருக்கலாம். அவரைப் பிடிக்க 20 தனிப்படைக் குழுக்களை அமைத்து குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியுள்ளோம். மேலும், குற்றவாளி மீது முன்பு ஏதாவது குற்றப் பதிவு உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
சைஃப் மற்றும் கரீனா கபூர்-கானின் இளைய மகன் ஜெஹ் ஆகியோரின் அறைக்குள் ஊடுருவிய நபர் முதலில் நுழைந்து, எதிர்கொண்டபோது ரூ.1 கோடி கேட்டுள்ளார். அதன்பின்னர் அவர்களை கத்தியால் தாக்க முயன்றுள்ளார்” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிர்ச்சி தோற்றம்! நடிகர் சல்மான் கானுக்கு என்ன ஆனது?
லவ் ஜிகாத்! காதல் திருமணம் செய்த நடிகர் ஆமிர் கானுக்கு மிரட்டல்! லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பா?

அமெரிக்காவில் இந்தியருக்கு 15 முறை கத்திக்குத்து

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



