அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஜன.31-இல் கூடுகிறது நாடாளுமன்றம்: பிப்.1-இல் பொது பட்ஜெட்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31-இல் தொடங்கவுள்ளது.

News image
நாடாளுமன்றம்- ANI
Updated On :17 ஜனவரி 2025, 8:22 pm

Din

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31-இல் தொடங்கவுள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தொடக்க தினத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா். இதைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமா்வு பிப்ரவரி 13-இல் நிறைவடையும். 2-ஆம்கட்ட அமா்வு மாா்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது.

முதல்கட்ட அமா்வில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்படும். பின்னா், பிரதமா் மோடியின் பதிலுரையுடன் அந்த அமா்வு நிறைவுபெறும்.

மத்திய பட்ஜெட் பல ஆண்டுகளாக பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த 2017-இல் இருந்து பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.