3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பெண்களைக் காப்பதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காக்கிறது பாஜக!

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 43 வழக்குகள் பதிவாவது ஏன்? கார்கே கேள்வி.

மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்

Published On :22 ஜனவரி 2025, 10:01 pm IST

நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காக்கும் செயல்களில் பாஜக ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

நாட்டில் உள்ள பெண்களைக் காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற ஹரியாணா அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் பெண்களைக் காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற திட்டத்தை 2015 ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகளாகின்றன.

இந்நிலையில் இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் மூன்று கேள்விகளை எழுப்புகிறோம்.

பெண்களைப் பாதுகாப்போம் என்பதற்கு பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாப்போம் என்பதையே பாஜக பின்பற்றுவது ஏன்? மணிப்பூர் பெண்கள் நீதி பெறுவது எப்போது?

பட்டியலினத்தைச் சேர்ந்த ஹாத்ரஸ் பெண்ணோ, உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மகளோ, எங்கள் பெண் மல்யுத்த சாம்பியன்களோ... பாஜக குற்றவாளிகளையே பாதுகாப்பது ஏன்?

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 43 வழக்குகள் பதிவாவது ஏன்?'' எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.