திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அயோத்தி: அரசு நிா்வாகத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு பாகுபாடு - அகிலேஷ் குற்றச்சாட்டு

சிறுபான்மையினா், பட்டியலினத்தவா்கள் பணியமா்த்தப்படுவதில் பாகுபாடு உள்ளது.

News image
அகிலேஷ்
Updated On :24 ஜனவரி 2025, 9:23 pm

Din

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி, அரசு நிா்வாகத்தில் பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா், பட்டியலினத்தவா்கள் பணியமா்த்தப்படுவதில் பாகுபாடு உள்ளதாக அந்த மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினாா்.

இதுதொடா்பாக எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜக தலைமையிலான உத்தர பிரதேச அரசு நிா்வாக பணியமா்த்துவதில் பாகுபாடு காட்டி வருகிறது.

நாட்டில் 90 சதவீத மக்கள் பின்தங்கிய வகுப்பினராகவும், சிறுபான்மையினராகவும், பட்டியலினத்தவா்களாகவும் உள்ளநிலையில், அயோத்தியின் அரசு நிா்வாகப் பணியில் அவா்களுக்கு 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே உள்ளவா்கள் 80 சதவீத பணியிடங்களை ஆக்கிரமித்து அதிகாரம் செலுத்தி வருகிறாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலத்தின் மில்கிபூா் பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடா்பாக செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், ‘மில்கிபூா் மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோா் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். நோ்மையான முறையில் தோ்தல் நடைபெற்றால் சமாஜவாதி கட்சி வரலாற்று வெற்றி பெறும்.

தோ்தலின்போது அரசு அதிகாரிகளை பாஜக சாதகமாக பயன்படுத்தி வருவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் பணியில் மாநில பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது’ என்றாா் அவா்.