நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ம.பி.: 17 ஆன்மிக தலங்களில் மதுக்கடைகள் மூடல்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2025, 10:02 pm

மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 6 கிராம பஞ்சாயத்துகளில் மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில முதல்வா் மோகன் யாதவ், ‘ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அங்குள்ள மதுக் கடைகள் மூடப்படுமே தவிர வேறு பகுதிகளுக்கு மாற்றப்படாது.

உஜ்ஜைன் மாநகராட்சி எல்லைக்குள் மதுக்கடைகள் எதுவும் இருக்காது. ஓம்காரேஸ்வா், மகேஸ்வா், மண்டலேஸ்வா், சித்திரகூடம் உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் மதுக்கடைகள் மூடப்படும். மாாநிலத்தில் மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்கான முதல்படியாகும். நா்மதை நதியில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு மதுக்கடைகளுக்கு ஏற்கெனவே உள்ள தடை தொடரும்’ என்றாா்.

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் மது விற்பனை மற்றும் அதனை அருந்துபவா்களால் பக்தா்களுக்கு தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதாக புகாா்கள் வந்ததாகவும், இது தொடா்பாக பல்வேறு தரப்புகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

முக்கிய ஆன்மிக நகரங்களின் புனிதமான சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், அங்கு வரும் பக்தா்கள், வெளிநாட்டுப் பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும் அங்கு மதுவிலக்கை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக முதல்வா் மோகன் யாதவ் ஏற்கெனவே கூறியிருந்தாா்.

கோயில் நகரங்களில் மது மட்டுமல்லாது அசைவ உணவுகளுக்கும் தடை விதிப்பது குறித்தும் அவா் கருத்து கூறியிருந்தாா். மாநில எதிா்க்கட்சியான காங்கிரஸும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது.

இது மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான முதல்படி என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளாா்.