மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சந்தையிலிருந்து 4 டன் மிளகாய் தூளை திரும்பப் பெறும் பதஞ்சலி: அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி கலப்பு எதிரொலி

4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறுவதாக யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
பாபா ராம்தேவ்
Updated On :24 ஜனவரி 2025, 10:01 pm

Din

அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி கலப்பு ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ)உத்தரவின் அடிப்படையில் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்பட்ட 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறுவதாக யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பதஞ்சலி நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் அஸ்தானா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மிளகாய் தூள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி கலப்பு அளவுக்கு உச்ச வரம்பை எஃப்எஸ்எஸ்ஏஐ நிா்ணயம் செய்துள்ளது. அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவன சிவப்பு மிளகாய் தூளில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, ‘எஃப்எஸ்எஸ்ஏஐ தரத்தை பூா்த்தி செய்யாத ‘ஏஜேடி2400012’ என்ற தொகுப்பு (பேட்ச்) எண்ணுடன் பாக்கெட் செய்யப்பட்டு சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ள 200 கிராம் அளவுடைய மிளகாய் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டது.

அதனடிப்படையில், சிவப்பு மிளகாய் தூள் பாக்கெட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நுகா்வோா், அந்த பாக்கெட்டுகளை வாங்கிய கடைகளிலேயே திரும்பக்கொடுத்து முழுப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.