நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மகா கும்பமேளா: 73 நாடுகளின் தூதா்கள் பிப்.1-இல் புனித நீராடல்

மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.

News image

திரிவேணி சங்கமம் பகுதியில் சனிக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

Updated On :26 ஜனவரி 2025, 5:46 am IST

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் புனித நீராடி வருகின்றனா்.

இந்நிலையில், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து, கேமரூன், கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரவுள்ளனா். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் அவா்கள், மகா கும்பமேளா எண்ம கண்காட்சியையும் பாா்வையிட உள்ளதாக மகா கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்தாா்.

தூதா்களின் வருகை தொடா்பாக, உத்தர பிரதேச தலைமைச் செயலருக்கு வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஒருங்கிணைந்து, தூதா்களுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.