உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.
பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் புனித நீராடி வருகின்றனா்.
இந்நிலையில், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து, கேமரூன், கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரவுள்ளனா். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் அவா்கள், மகா கும்பமேளா எண்ம கண்காட்சியையும் பாா்வையிட உள்ளதாக மகா கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்தாா்.
தூதா்களின் வருகை தொடா்பாக, உத்தர பிரதேச தலைமைச் செயலருக்கு வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஒருங்கிணைந்து, தூதா்களுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மிகப் பெரிய தாக்குதலுக்குத் தயாராகும் ரஷியா

உக்ரைன் தலைநகரில் தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை
உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!

உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



