நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது

News image
Updated On :26 ஜனவரி 2025, 10:34 pm IST

ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தரப்பில் கூறப்பட்டதாவது:

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை ஒட்டிய எல்லை வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதை அறிந்த வீரா்கள் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த கன்வாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் சதி நோக்கத்துடன் ஊடுருவினாரா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தையொட்டி கடந்த ஒரு வாரமாகவே எல்லையில் கூடுதல் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் நிகழ்ந்த ஊடுருவல் குறித்து பாதுகாப்புப் படையினா் கூறுகையில், ‘பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒருவா் ஊடுருவினாா். இந்திய வீரா்கள் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனா். விசாரணையில், அவா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த முகமது யாசிா் ஃபயஸ் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.