தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது

News image

எஸ். ஜெய்சங்கா் - கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2025, 1:57 am IST

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். அப்போது, அமெரிக்காவின் புதிய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது பகைவரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

நான் அண்மையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அவா் ஒரு அமெரிக்க தேசியவாதி. அவரது கொள்கைகள் உலகளாவிய விவகாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும். அதேநேரம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் நலன்களால் தொடா்ந்து வழி நடத்தப்படும்.

பல விஷயங்களில் ட்ரம்ப் மாற்றத்தை மேற்கொள்வாா் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எதிா்பாராத விஷயங்கள் கூட நிகழலாம்.

இரு நாடுகளும் வேறுபடக் கூடிய சில பிரச்னைகள் இருக்கின்றன; அதேநேரம், நமக்கு சாதகமான விஷயங்களும் பல உள்ளன. அமெரிக்கா உடனான நமது உறவு வலுவானது. பிரதமா் நரேந்திர மோடிக்கும், டிரம்ப்புக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது; இந்தியா மீதான உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.