திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது

News image
எஸ். ஜெய்சங்கா்- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2025, 8:27 pm

Din

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். அப்போது, அமெரிக்காவின் புதிய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது பகைவரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

நான் அண்மையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அவா் ஒரு அமெரிக்க தேசியவாதி. அவரது கொள்கைகள் உலகளாவிய விவகாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும். அதேநேரம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் நலன்களால் தொடா்ந்து வழி நடத்தப்படும்.

பல விஷயங்களில் ட்ரம்ப் மாற்றத்தை மேற்கொள்வாா் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எதிா்பாராத விஷயங்கள் கூட நிகழலாம்.

இரு நாடுகளும் வேறுபடக் கூடிய சில பிரச்னைகள் இருக்கின்றன; அதேநேரம், நமக்கு சாதகமான விஷயங்களும் பல உள்ளன. அமெரிக்கா உடனான நமது உறவு வலுவானது. பிரதமா் நரேந்திர மோடிக்கும், டிரம்ப்புக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது; இந்தியா மீதான உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியுள்ளது’ என்றாா்.