கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

நீதி விசாரணைக் குழு பிரயாக்ராஜில் ஆய்வு!

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை நீதித்துறை விசாரணைக்குழு ஆணையம் ஆய்வு..

News image

மகா கும்பமேளா - Center-Center-Delhi

Updated On :31 ஜனவரி 2025, 3:26 pm IST

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட நீதி விசாரணைக்குழு ஆணையம் பிரயாக்ராஜ் சென்றடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜன.29 அன்று மௌனி அமாவாசையையடுத்து திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடக் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாகவும் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்ததாகவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில், முன்னாள் காவல்துறை இயக்குநர்(டிஜிபி) வி.கே குப்தா மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.கே சிங் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை கூட்ட நெரிசலில் ஏற்பட்ட பலியானதையடுத்து இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விசாரணை மேற்கொள்ள பிரயாக்ராஜ் வந்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறது.

இந்த ஆணையம் விசாரணையை முடிக்க ஒரு மாதக்காலம் எடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குழு தலைவர் ஹர்ஷ் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கட்டுக்கடங்காத கூட்டம்..

மௌனி அமாவாசையான அன்று தடைகளை மீறிய நிலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.