கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு...
Nipah virus
நிபா வைரஸ்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதேபோன்று, ஜூன் 28ல் கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவருடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 6 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Summary

Health authorities in Kerala on Friday issued an alert across three northern districts after two people showed possible signs of Nipah virus infection, reviving fears of an outbreak that the state has battled in the past.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com