மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி
Updated On :4 ஜூலை 2025, 7:55 pm

Din

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொது சுகாதாரப் பணியாளா்கள் விழிப்புடன் செயலாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடா்பில் இருந்த 58 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அப்பெண்ணின் வீட்டில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட வாா்டுகள், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டியூஷன் மையங்கள், அங்கன்வாடிகள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வெளிநபா்கள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணியவும், தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளவால்களில் இருந்து மனிதா்களுக்கும், பாதிக்கப்பட்ட நபா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருப்பவா்களுக்கும் பரவக் கூடிய நிஃபா தொற்று, கடுமையான காய்ச்சல், உடல்வலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளைக் கொண்டதாகும். அதிக உயிரிழப்பு அபாயமுள்ள இத்தீநுண்மியின் பரவல், பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.