ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பௌத்த, சீக்கியர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியுடன் யாத்திரை திட்டம்: யோகி ஆதித்யநாத்

பௌத்த, சீக்கிய யாத்திரை உதவித் திட்டங்கள்.. ஆன்மிக மேம்பாட்டிற்கு யோகி ஆதித்யநாத் முயற்சி.

News image
முதல்வர் யோகி ஆதித்யநாத்
Updated On :5 ஜூலை 2025, 10:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் பௌத்த, சீக்கிய பக்தர்களுக்கு ஆன்மிக பயணத்தை எளிதாக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் நிதியுதவிடயுடன் இரண்டு யாத்திரை திட்டங்களைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மறு ஆய்வுக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,

புனித யாத்திரைகள், ஆன்மிக மேம்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு வழியாகும், மேலும் குடிமக்கள் தங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடைய இடங்களை அடைவதற்கு உதவுவது அரசின் பொறுப்பு.

பௌத்த தீர்த்த தரிசன யோஜனாவின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய யாத்திரை தலங்களைப் பார்வையிடப் பௌத்த பக்தர்கள், குறிப்பாகத் துறவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

இதேபோல், 'பஞ்ச் தக்த் யாத்ரா யோஜனா' உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சீக்கிய பக்தர்களின் ஐந்து புனிதத் தலங்களான ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப், ஸ்ரீ அகல் தக்த் சாஹிப், ஸ்ரீ தம்தாமா சாஹிப், ஸ்ரீ தக்த் சச்கண்ட் ஸ்ரீ ஹசூர் சாஹிப் மற்றும் ஸ்ரீ ஹர்மந்திர் ஜி சாஹிப் (பாட்னா சாஹிப்) ஆகியவற்றைப் பார்வையிடவும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.

இந்த இரண்டு திட்டங்களிலும், பக்தர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும். நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறை முழுவதுமாக இணையத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும், பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.

இந்தத் திட்டங்கள் ஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைந்து செயல்படுத்தப்படும். பாதுகாப்பு, வசதி மற்றும் மத நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது முயற்சிகள் உள்ளடக்கிய வளர்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கும் என்றும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

summary

Chief Minister Yogi Adityanath has ordered officials to launch two pilgrimage assistance schemes to facilitate the spiritual journey of Buddhist and Sikh devotees in Uttar Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.