நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

முடக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளப் பக்கம்

Updated On :6 ஜூலை 2025, 11:59 am

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கோரிக்கையின்படியே எக்ஸ் நிறுவனம் இதனைச் செய்துள்ளதாக தகவல்கள் பரவியதால், மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,

''ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் அரசு எதையும் கேட்கவில்லை. மாறாக, ராய்ட்டர்ஸ் இந்தியாவில் முடக்கப்பட்டது ஏன் என்றே கேட்டுள்ளது. மற்ற நாடுகள் கையாளும் ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் ராய்ட்டர்ஸ் வேண்டும் என்பதை அரசு விரும்புகிறது என்பதையே இவை காட்டுகின்றன. எக்ஸ் தளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏதேனும் குழப்பமாக இது இருக்கலாம்.

ராய்ட்டர்ஸை நிறுத்திவைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் அரசுக்கு இல்லை. இந்தப் பிரச்னையை சரிசெய்ய எக்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Government of India did not ask the social media giant to block ruters handle and wants it to operate in the country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.