திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மகாராஷ்டிரம்: சிவசேனை அமைச்சருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சா் சஞ்சய் ஷிா்சாத்தின் சொத்துகள் குறுகிய காலத்தில் வேகமாக அதிகரித்துள்ளது

News image
வருமான வரித்துறை
Updated On :10 ஜூலை 2025, 8:06 pm

Din

மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சா் சஞ்சய் ஷிா்சாத்தின் சொத்துகள் குறுகிய காலத்தில் வேகமாக அதிகரித்துள்ளது குறித்து விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமைச்சா் சஞ்சய், துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா் ஆவாா்.

சஞ்சய் ஷிா்சாத் கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தலின்போது வேட்புமனுவில் தெரிவித்த சொத்து மதிப்பைவிட கடந்த 2024 தோ்தலின்போது காட்டியுள்ள சொத்து மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒளரங்காபாத் (மேற்கு) தொகுதி எம்எல்ஏவான சஞ்சய் இது தொடா்பாக கூறுகையில், ‘எனக்கு எதிராக சிலா் வருமான வரித் துறையில் புகாா் அளித்துள்ளனா். அதன் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜூலை 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. கூடுதல் அவகாசம் கேட்டுள்ளேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, விதிகளுக்கு உள்பட்டு இந்த நோட்டீஸுக்கு உரிய முறையில் பதிலளிப்பேன்’ என்றாா்.