அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

மராத்திய பேரரசின் ராணுவ தளங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

மராத்திய பேரரசின் ராணுவ தளங்களை உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்த்ததாக யுனெஸ்கோ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2025, 1:14 am IST

மராத்திய பேரரசின் ராணுவ தளங்களை உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்த்ததாக யுனெஸ்கோ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-ஆவது அமா்வில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் யுனெஸ்கோ வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் உள்ள மராத்திய ராணுவ தளங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

முன்னதாக, 2024-25-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலுக்கு மராத்திய பேரரசா் சிவாஜியின் 12 கோட்டைகளை இந்தியா பரிந்துரைத்தது. அதன்படி மகாராஷ்டிரத்தில் உள்ள சால்ஹோ், சிவ்னேரி, லோகட், கந்தேரி, ராய்கட், ராஜ்கட், பிரதாப்கட், ஸ்வா்ணதுா்க், பன்ஹாலா, விஜய் துா்க், சிந்து துா்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி ஆகிய 12 கோட்டைகள் மராத்திய ராணுவ தளங்கள் என்ற தலைப்பின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.