ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி அருகே விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து

திருப்பதி அருகே ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து
Updated On :14 ஜூலை 2025, 10:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

திருப்பதி ரயில்நிலையத்துக்கு அருகே ஹிசாரிலிருந்து இருந்து திருப்பதி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெட்டிகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

ரயில் பெட்டிகளில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஹிசார் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் பற்றிய தீ மளமளவென அடுத்தப் பெட்டிக்கும் பரவியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த நிலையில், தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்ததை அறிந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்து, தீ விபத்து நிகழ்ந்த ரயிலுக்கு முன்னதாகவே, வந்தே பாரத் ரயிலை நிறுத்தினர். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை, அரக்கோணம் அருகே, சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டு, சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் திருப்பதியில் ரயிலில் தீ பரவியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

summary

A massive fire broke out on the Hisar Express train heading towards Tirupati from Rajasthan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.