ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜேஇஎம் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதி சுட்டுக்கொலை: ஜம்மு-காஷ்மீா் காவல் துறை டிஜிபி

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதி சுட்டுக்கொலை

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜூலை 2025, 8:18 pm

Din

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல் துறை டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஜம்மு அருகே உள்ள அக்னூா் காவல் நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் உள்ள டூடூ-பசந்த்கா் காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில் ஹைதா் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா். அவா்களின் 3 கூட்டாளிகள் தப்பிவிட்டனா். சுட்டுக்கொல்லப்பட்ட ஹைதா் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதியாக இருந்தாா்.

ஜம்மு மண்டலத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனா் என்பதை பொது வெளியில் கூற இயலாது. அவா்களை ஒழிக்கும் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து வருகின்றனா்’ என்றாா்.