அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

நீட் தேர்வில் தோல்வியடைந்து 20 வயது பெண், இன்று ரோல்ஸ் ராய்ஸில் ரூ.72 லட்சத்தில் வேலை பெற்று சாதித்துள்ளார்.

News image

ரோல்ஸ் ராய்ஸ்

Updated On :17 ஜூலை 2025, 4:19 pm IST

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன, நம்பிக்கை, அயராத உழைப்பு இருந்தால் மிகப்பெரிய கனவுகளை எட்டலாம் என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் ரிதுபர்னா.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வை எழுதி டாக்டராக நினைத்த ரிதுபர்னா, அதில் தோல்வியடைந்தபோது துவண்டுபோகவில்லை. பிறகு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக முடிவு செய்தார். ஆனால், அவரது தந்தையின் சொல்படி, பொறியியல் சேர்ந்து படித்தார்.

இன்று பிரிட்டனில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தில் இளம் வயதில் பணியில் சேர்ந்திருக்கும் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

கர்நாடகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதோடு, விவசாயத் துறைக்குத் தேவையான ரோபோடிக் இயந்திரங்களை தயாரித்து சர்வதேச அளவில் விருதுகளைப் பெற்றார்.

படிக்கும்போதே, தன்னுடைய திறமையால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இன்டர்ஷிப் கிடைத்தது. தற்போது அது பணி வாய்ப்பாக மாறியிருக்கிறது.

2025, ஜனவரி முதல், வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறார். நள்ளிரவில், பணியாற்றத் தொடங்கி, காலை 6 மணி வரை வேலை செய்வாராம். பிறகு, பகலில் தன்னுடைய கல்லூரி படிப்புகளை கவனிப்பாராம். ஏழாவது பருவத் தேர்வு முடிந்ததும், அவர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் சென்று, ரோல்ஸ் - ராய்ஸ் நிறுவனத்தில் முழு நேரப் பணியாளராக சேரவிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவரது ஆண்டு வருவாய் ரூ.39.6 லட்சமாக இருந்த நிலையில், அவரது அயராத உழைப்பு மற்றும் திறமையைப் பார்த்த நிறுவனம் சம்பளத்தை ரூ.72.3 லட்சமாக உயர்த்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.