சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை: சஞ்சய் சிங்

அதிகாரப்பூர்வமாக இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இல்லை என எம்.பி. சஞ்சய் சிங் அறிவிப்பு

News image

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங் - ஏஎன்ஐ

Updated On :18 ஜூலை 2025, 5:15 pm IST

மக்களவைத் தேர்தலுக்குப் பின், இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கவில்லை என்று கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து புது தில்லியில் போட்டியிட்டது. அதேவேளையில் ஹரியாணா மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை இவ்விரு கட்சிகளும் தனித்தனியாகவே சந்தித்தன.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தல் வரைதான், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இருந்தது என்ற எங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம்.

நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, மத்திய அரசின் அனைத்து மோசமான கொள்கைகளையும் எதிர்ப்போம். தற்போது, பிகார், உத்தரப்பிரதேசம், பூர்வாஞ்சல் பகுதிகளில் மக்களின் வீடுகள், கடைகள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்படுகிறது. இதைத்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பவிருக்கிறோம் என்றார்.

மேலும் பேசிய அவர், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவித்துவிட்டோம், இன்றைய நாள்படி, இந்தியா கூட்டணியில், ஆம் ஆத்மி கட்சி இல்லை. எங்கள் கூட்டணி மக்களைத் தேர்தலுடன் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், தில்லியில் குடிசைப் பகுதிகளை இடித்துத் தரைமட்டமாக்கிய விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.