பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு!

குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு பற்றி...

News image
குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் சந்திப்பு - President of India/X
Updated On :22 ஜூலை 2025, 11:23 am

இணையதளச் செய்திப் பிரிவு

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை) காலை தொடங்கிய நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு வழக்கம்போல் தலைமைத் தாங்கினார்.

இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை மாநிலங்களவை அவையின் துணைத் தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் தலைமையில் கூடியது.

மேலும், மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவரின் ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டு, முறைப்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அவையை வழிநடத்தவுள்ளார்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் மாளிகைக்கு நேரில் சென்ற ஹரிவன்ஷ், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

ஹரிவன்ஷ், அடுத்த குடியரசு துணைத் தலைவரா?

ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஹரிவன்ஷ், 2020 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவராகவுள்ள ஹரிவன்ஷ், அடுத்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பிகார் முதல்வர் நிதிஷ் குமாரே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

Rajya Sabha Deputy Chairman Harivansh Narayan met President Draupadi Murmu on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.