திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் இருந்து அச்சுதானந்தன் உடல் ஆலப்புழாவுக்கு கொண்டுவரப்பட்டது.

News image

அச்சுதானந்தன் இறுதி ஊர்வலம் - PTI

Updated On :23 ஜூலை 2025, 4:24 pm IST

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.

கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக திங்கள்கிழமை(ஜூலை 21) மரணமடைந்தார்.

அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள், மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அச்சுதானந்தனின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுங்கிலும் குவிந்தனர்.

இரவு முழுவதும் கடும் மழையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் குவிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால், வெறும் 150 கிலோ மீட்டர் தொலைவை கடக்க சுமார் 22 மணிநேரம் ஆகின.

ஆலப்புழாவின் புன்னப்ராவுக்கு இன்று பிற்பகலில் தான் அச்சுதானந்தனின் உடல் வந்தடைந்தது. அவரது வீட்டில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்னும் சற்றுநேரத்தில் புன்னப்ரா - வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அச்சுதானந்தன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

கேரள முதல்வர் பினராயில் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

Summary

The funeral procession of former Kerala Chief Minister Achuthanandan, which left Thiruvananthapuram yesterday morning, reached Alappuzha after 22 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.