இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நொய்டாவில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதல்: 5 வயது சிறுமி பலி, 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது

News image
விபத்துக்குள்ளான கார்.
Updated On :27 ஜூலை 2025, 8:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த சொகுசு கார் சனிக்கிழமை இரவு மோதியது. இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி பலியானார்.

மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் மேலும் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் மற்றும் காரில் இருந்தவர் என இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்கள் நொய்டாவைச் சேர்ந்த யாஷ் சர்மா (22), அபிஷேக் ராவத் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஹரியாணா பதிவு எண்ணைக் கொண்ட பிஎம்டபிள்யூ காரும் பறிமுதல் செய்யப்பட்டது. சிறுமி தனது தந்தை மற்றும் மாமாவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

summary

Police have arrested two people, the driver and the passenger, in connection with the incident, booking them under charges of rash driving and death by negligence.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.