திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் உள்ள குடிநீரை அதன் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வெளியில் இருந்து மாற்ற முயன்றிருக்கிறார். அப்போது புலி தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இதுகுறித்து உயிரியல் பூங்காவின் இயக்குநர் மஞ்சு தேவி கூறுகையில், ராமச்சந்திரன் உயிரியல் பூங்காவில் மேற்பார்வையாளராக உள்ளார். அவர் புலி கூண்டின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
தாக்குதல் உண்மையில் எதிர்பாராதது. கூண்டிற்குள் குடிநீரை மாற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது. கூண்டின் கம்பிகள் வழியாக அவரை புலி தாக்கியது. இதில் அவருக்கு நெற்றிக்கு மேலே சிறிய காயம் ஏற்பட்டது.
முதலில் அவர் பொது மருத்துவமனைக்கும், பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் கொண்டு செல்லப்பட்டார். முதன்மை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றார்.
Summary
An employee was attacked by a tiger while cleaning its enclosure at the zoo here on Sunday, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 ஆண்டுகளாக 27 ஆம் தேதிகளில் மட்டும் பிறக்கும் சிங்கக் குட்டிகள்: தில்லி உயிரியல் பூங்காவில் விநோதம்

தில்லி உயிரியல் பூங்காவில் செயலி,சுய-டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள்! மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

ம.பி.யில் புலி தாக்கியதில் பெண் பலி, 4 பேர் காயம்

மகாராஷ்டிரம்: புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



