புது தில்லி: நாட்டில் எத்தனை கோயில்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை கண்டறியுமாறு உத்தர பிரதேசத்தில் உள்ள பாங்கே பிகாரி கோயில் நிா்வாக குழுவிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் வரலாற்று சிறப்புமிக்க பாங்கே பிகாரி கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிா்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில், உத்தர பிரதேச ஸ்ரீ பாங்கே பிகாரி ஜி கோயில் அறக்கட்டளை அவசர சட்டம் 2025 கொண்டுவரப்பட்டது.
இந்த அவசர சட்டத்துக்கு எதிராக கோயில் நிா்வாக குழு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அவசர சட்டம் கொண்டுவரப்பட்ட நேரம் மற்றும் சூழலை சுட்டிக்காட்டி, கெட்ட நோக்கத்துடன் அச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘நாட்டில் எத்தனை கோயில்கள், சட்டத்தின் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன? கோயில்கள் மூலம் எவ்வளவு நன்கொடையை மாநில அரசுகள் பெறுகின்றன? என்பதை பாங்கே பிகாரி கோயில் நிா்வாக குழு நேரடியாகச் சென்று கண்டறிய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை சோ்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

சென்னையில் பார்க்க வேண்டிய 5 அம்மன் கோயில்கள்!

நீா்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் கோயில்கள்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



