மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்புகள்! கர்நாடகம், கேரளத்தில் இருவர் பலி!

கர்நாடகம், கேரளத்தில் கரோனா நோய்த்தொற்றால் இருவர் பலியானதைப் பற்றி...

News image

கரோனா பாதிப்பு..

Updated On :1 ஜூன் 2025, 3:58 pm

கர்நாடகத்தில் கரோனா நோய்த் தொற்றால் இருவர் பரிதாபமாக பலியாகினர்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,700-ஐத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 360 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச கரோனா தொற்று இதுவாகும்.

ஜூன் மாதத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கேரளத்தில் 1400 பேர், மகாராஷ்டிரத்தில் 485 மற்றும் தில்லியில் 436 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கர்நாடகம் மற்றும் கேரளத்தில் முறையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது மொத்தமாக 3,758 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.