வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 34 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
சிக்கிமில் பெய்து வரும் தொடர் கனமழையால், அம்மாநிலத்தின் வடக்குப் பகுதியிலுள்ள, சட்டென் பகுதியில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள ராணுவ முகாம் உள்பட பல கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்தச் சம்பவத்தில், 3 ராணுவ வீரர்கள் பலியான நிலையில், 6 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த சுமார் 34 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு பக்யோங் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.
தற்போது, மீட்கப்பட்டுள்ளவர்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் சிக்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலச்சரிவில் சிக்கி பலியான ராணுவ வீரர்கள், லக்விந்தர் சிங், நாயக் முனிஷ் தாக்குர், அபிஷேக் லகாந்தா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரீமியாவில் ரஷிய ராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர்: சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் காயம்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து! 2 வீரர்கள் பலி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


