சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மே.வங்கத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் புதியதாக 60 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2025, 11:00 am

மேற்கு வங்கத்தில் புதியதாக 60 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 புதிய கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், அம்மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 28 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், நேற்று (ஜூன் 3) தனியார் மருத்துவமனையில் 7 மாத குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இத்துடன், தற்போது அம்மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பினால் ஹவுராவைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.