பெங்களூரு: 11 பேர் உயிரிழந்த துயரம் நேர்ந்த பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடல் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்துள்ளார்.
கா்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த புதன்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்ட ஆா்சிபி அணிக்குப் பாராட்டு விழாவில் சிலருக்கு மட்டுமே கிடைத்த அனுமதிச்சீட்டுகள், பலருக்கும் கிடைக்காமல் போனதால் வலுக்கட்டாயமாக நுழைவாயில்களில் நுழைய முற்பட்டனா் ரசிகர்கள். அவர்கள் குறுக்குவழிகளில் மைதானத்தில் நுழைந்தனா். இதனால் தற்காலிக தடுப்புகளை உடைத்துக் கொண்டும் முன்னேறிய ரசிகா்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சித்தராமையா அளித்துள்ள பதிலில், “சின்னசாமி திடலை மாநகர் எல்லைக்கு அப்பால் மாற்றப்படுவது குறித்த சாத்தியக்கூறுகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணை: மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்த டி.கே. சிவகுமார்!

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்!
தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்







