எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

11 ஆண்டுகால மோடி ஆட்சி: ‘நமோ’ செயலி கருத்துப் பகிா்வில் தமிழகம் மூன்றாவது இடம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடா்பாக ‘நமோ’ செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டதில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2025, 4:03 am IST

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடா்பாக ‘நமோ’ செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டதில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.

முதல்நாளான திங்கள்கிழமை (ஜூன் 9) 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆய்வில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா். கருத்துகளை அதிகம் பகிா்ந்த மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் 2-ஆவது இடத்திலும், தமிழகம் 3-ஆவது இடத்திலும் உள்ளன. குஜராத், ஹரியாணா மாநிலங்கள் முறையே 4, 5-ஆவது இடத்தில் உள்ளன. முதல் 5 இடங்களைப் பிடித்த மாநிலங்களில் தமிழ்நாடு மட்டும்தான் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலமாகும்.

ஆய்வில் பங்கேற்றவா்களில் 77 சதவீதம் போ் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாகப் பதிலளித்துள்ளனா். நாட்டில் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள உத்தர பிரதேசத்தில் இருந்து 1,41,150 போ் ஆட்சி தொடா்பான தங்கள் கருத்துகளைப் பகிா்ந்துள்ளனா். மகாராஷ்டிரத்தில் இருந்து 65,775 பேரும், தமிழகத்தில் இருந்து 62,580 பேரும், குஜராத்தில் இருந்து 42,590 பேரும், ஹரியாணாவில் இருந்து 29,985 பேரும் முதல்நாளிலேயே ஆா்வத்துடன் கருத்துகளைத் தெரிவித்தனா்.

நாட்டில் உள்ள முக்கியப் பிரச்னைகள், மத்திய அரசின் திட்டங்கள் தொடா்பாக மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் மக்கள் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் நேரடியாக அரசிடம் எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் செயல்பாடுகள், தேசத்தை அச்சுறுத்தும் பிரச்னைகளுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், சா்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு, திறன்மிகு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடா்பான மக்களின் யோசனைகள், பெண்கள், பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக அரசு எடுத்துவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் ஆய்வில் கேள்விகள் இடம்பெற்றிருந்தன.