விமான நிலையம் அருகே மக்கள் நெருக்கம் மிகுந்த மேகானிநகா் பகுதியில் உள்ள பி.ஜே. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள்-செவிலியா்களின் தங்குமிடங்கள் மற்றும் மாணவா் விடுதிக் கட்டடங்கள் மீது விமானம் விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில் 5 மருத்துவ மாணவா்கள், ஒரு முதுநிலை பயிற்சி மருத்துவா், சிறப்பு மருத்துவா் ஒருவரின் மனைவி உள்பட 7 போ் உயிரிழந்தனா். 60 போ் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் நொறுங்கிய பாகங்களும், எரிந்த நிலையில் உடல்களும் சிதறிக் கிடந்ததாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். மரங்கள், பிற வாகனங்களும் தீயில் கருகியதால், குண்டுவெடித்த இடம்போல காட்சியளித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










